Sunday 17 April 2011

அய்யோ மோசம் என்றே வெம்புவார்

2011-03-19


ஒரு புத்தகக் கடையில் நுனிப் புல் மேய்ந்து கொண்டு இருந்த போது சுவைத்தது:

"ஒரு பெண், ஆண் எப்படியும் திருமணத்திற்குப் பிறகு (தான் விரும்பும் படி) மாறி விடுவான் என்று நம்பிக் கொண்டு திருமணம் செய்து கொள்கிறாள். ஓர் ஆண், பெண் திருமணத்திற்குப் பின் (இப்போது தான் விரும்பும் படி இருப்பதிலிருந்து) மாறி விட மாட்டாள் என்று நம்பிக் கொண்டு திருமணம் செய்து கொள்கிறான். ஆனால் இருவர் நம்பிக்கைகளும் பொய்த்துப் போகின்றன."

ஆணும் பெண்ணும் நம்புவார் - அய்யோ
மோசம் என்றே வெம்புவார்

வெம்புதல் = உள்ளுக்குள்ளேயே புழுங்கிப் புலம்பிச் சாதல்

No comments:

Post a Comment