Tuesday 22 February 2022

இரு தறுவாய்கள் - இரு பார்வைகள் (Two Contexts and Two Perspectives)

 2022-02-22

இரு தறுவாய்கள் - இரு பார்வைகள் (Two Contexts and Two Perspectives)


Many years ago, I had written the following (on 03-May-2007 to Shan) which is worth sharing.


There are two contexts and two perspectives. 

Contexts: Relative and Absolute. 
Perspectives: Separateness and Oneness. 

There are four combinations.

 

Relative

Absolute

Separateness

(S-R) All the play with attachment, words can prove/disprove.

(S-A) inferring the oneness, words cannot prove / disprove, words can point; cannot practise, words will contradict, no resolution possible with mind,  mind has to give up.

Oneness

(O-R) All the play with

detachment, point of reference has shifted, no desire to be this or that but watching this or that happens on its own accord.

(O-A) Nothing can be said, silence; peace.



1. Relative-context: Day-to-day life of body-minds.

2. Absolute-context: Looking at the illusion of relative-context. This is not exactly correct. Both (1 & 2) are within the illusion. But, there is no other way to communicate unless we are able to strike direct transmission (this is also not correct as who / which will communicate to whom / which, when all-there-is is IT aka existence / nature / awareness).

Perspective-S: ‘I’ as a separate individual having volition.
Perspective-O: There are no individuals to have or be deprived of volition.

Perspectives can be called contexts. Contexts can be called perspectives. They are not clear cut categories. It is enough if we understand the basis.

Sometimes one may abide in O-R (keeping quiet internally and flowing with the world and observing with detachment). Other times one may lose oneself in S-R fully. Some other times under the influence of S-A, one may share some insights like this.

These contexts and perspectives come and go (in our thoughts and words). When it is said ‘words cannot prove anything conclusively’, it is said in ‘absolute’ context with ‘separateness’ perspective. But, words can prove / save life / hang a murderer under ‘relative’ context with ‘separateness’ perspective as well as ‘oneness’ perspective.

There is nothing new or great about these contexts and perspectives. They are just convenient (conceptual) labels to remind ourselves to make better sense of ourselves when discussing or thinking to ourselves.

Added now:

Mixing these context-perspectives will not help to communicate effectively. One may not agree with these context-perspectives. One may see only S-R in which case we will have to first show the contradictions within S-R and point to the raw experiences (without conceptual layer / interpretation) of S-R (using some helper concepts like oneness, advaita which have to be thrown away after use; no clinging to them) to intuit all the context-perspectives. Raw experience of S-R is the only reality. The issue (illusion) is only what we make of it, what we understand it as.

‘Every level of illusion has to be transcended by using another illusion at the same level’
    --Ramana Maharshi

Ultimately there is no separateness / oneness or relative / absolute. They all come into play only when there is apparent sense-of-separation. The sense-of-separation (that we are separate from existence / nature) is not right or wrong (as it is an expression of existence / nature or whatever IS) but now it is understood as real as a concept and not really (concrete) real as taken before which is the root cause of everything - all manifestation (names and forms) including fear, suffering, dis-ease....

Even 'concept' and 'concrete' are labels and false split; they all need to be thrown away after understanding which will bring us back to where we started the exploration (seeking) but now everything looks the same as before as well as totally different forever. This is liberation which is ever present; this is (free will) freedom from willing (desire)!

We shall not cease from exploration
And the end of all our exploring
Will be to arrive where we started
And know the place for the first time.
            - T.S.Eliot (English poet)

"அத்வைதத்தை (O-A) நடைமுறை வாழ்க்கையில் கடை பிடிக்க முடியாது. அதே சமயம் அது (அத்வைதம்) குறித்த தெளிவு, உறுதி நடைமுறை வாழ்க்கையைப் பாதிக்காது மாற்றாது (O-R) என்பதும் தவறு. "

Friday 18 February 2022

தன்னிச்சை, கடவுள் நம்பிக்கை, நாத்திகன், மாறா ஒன்று ‍(ரமணரின் பதில்கள்)

2022-02-18

தன்னிச்சை, கடவுள் நம்பிக்கை, நாத்திகன், மாறா ஒன்று ‍(ரமணரின் பதில்கள்)


அனுதினமும் ஸ்ரீ பகவானுடன்
தேவராஜ முதலியார் நாட்குறிப்பிலிருந்து ‍- மார்ச் 16, 1945 முதல் ஜனவர் 4, 1947 வரை



பக்கம் 21

8-9-45 காலை:

பெஜவாடா சுப்பராவ் பகவானிடம் “கற்பனைக்கும் தோற்றத்திற்கும் என்ன வித்தியாசம்?” எனக் கேட்டார்.

பகவான்: ஒன்று தன்னிச்சையானது, மற்றது அப்படியல்ல. ஆயினும் தொடக்கத்தில் இல்லாவிட்டாலும், பகுத்தறிவின் கடைசியில் தோற்றத்தையும் தன்னிச்சைப் பிரிவிலேயே சேர்க்க வேண்டும்.

சுப்பராவ்: கனவுகள் அங்கு (தன்னிச்சையில்) உருவாவதைப் போலவா? என்று கேட்டார்.

பகவான்: ஆமாம்.

மற்றொரு அடியார்: நம் விழிப்புநிலை வாழ்வும் நாம் உறக்கத்தில் காணும் கனவு போலவே என்று சொல்லப்படுகிறது. ஆனால் கனவில் நாம் அதை நீக்கி விழித்துக் கொள்வதற்கு எவ்வித முயற்சியும் செய்வதில்லை. அதுபோலவே, கனவு போன்றதேயான நம் நனவு நிலையும் ஏன் தானாகவே முடிவுக்கு வந்து, நம் முயற்சி இல்லாமலேயே, உண்மை விழிப்பான ஞானநிலையில் கொண்டு சேர்க்கக் கூடாது?

பகவான்: விழிப்பு நிலையான இந்தக் கனவை நீக்க நீ முயற்சி செய்ய வேண்டும் என்று நீ நினைப்பதும், உண்மையான விழிப்பு நிலையாகிய ஞானத்தை அடைவதற்கு முயற்சி செய்வதும், அனைத்தும் அந்தக் கனவின் அங்கங்களே. ஞானமுற்றபின், தூக்கத்தில் கனவு என்பதோ, அல்லது விழிப்பு நிலை என்பதோ இல்லை (என்பதுடன்) 'நான்' எனும் உண்மை நிலை மட்டுமே உள்ளது என்பதை அறிவாய்.


பக்கம் 231-233

22-3-46 பிற்பகல்

பின்னர் சுவாமி, “ஆன்மசாக்ஷாத்காரத்திற்கு உத்தமமான வழி எது?” என்று கேட்டார்.

பகவான்: 'நான் உள்ளேன்' என்பதுதான் சாஸ்வதமான, அனைவருடைய சுய விளக்கமான பிரத்யக்ஷமான அனுபவம். 'நான் இருக்கிறேன்' என்பது போல் வேறெதுவும் அவ்வளவு பிரத்யக்ஷமாக இல்லை. மக்கள் எதைப் பிரத்யக்ஷம் என்கிறார்களோ, அதாவது புலன்களின் மூலம் கிடைக்கும்
அனுபவத்திற்கும் பிரத்யக்ஷத்திற்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு.

ஆன்மா மட்டுமே 'அது' (பிரத்யக்ஷம்). பிரத்யக்ஷம் என்பது ஆன்மாவின் மறுபெயர். அதனால் ஆன்மவிசாரம் செய்து 'நான் உள்ளேன்' என்றிருப்பதே நாம் செய்யவேண்டியது. ‘நான் இது', அல்லது 'நான் அது', என்றெண்ணுவது உண்மை அல்ல. ஆன்மாவிற்கு மறுபெயரான ‘நான் உள்ளேன்' என்பதே சத்தியம். நான் கடவுள் என்பது உண்மை அல்ல.

சுவாமி, “உபநிஷத்துக்களே 'நான் பிரம்மமாக உள்ளேன்' என்கின்றனவே” என்றார். 

அதற்கு பகவான், “அதைப் புரிந்து கொள்ள வேண்டியது அப்படி அல்ல. பிரம்மம் 'நான்' என்று இருக்கிறது என்பதே அதன் அர்த்தம். 'நான் பிரம்மமா
யிருக்கிறேன்' என்பதல்ல. ஒருவன் 'நான் பிரம்மம்' 'நான் பிரம்மம்' என்று தியானிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறா னென்று எண்ணக்கூடாது. யாராவது ‘நான் மனிதன்' ‘நான் மனிதன்' என்று எண்ணிக்கொண்டே இருக்கிறானா? அவன் மனிதனா, மிருகமா, மரமா என்று சந்தேகம் எழுந்தாலொழிய அவனுக்கு 'நான் ஒரு மனிதன்' என்று ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. அதுபோல ஆன்மா ஆன்மாவே. பிரம்மம் ஒவ்வொரு பொருளிலும் உயிரிலும் 'நான், நான்' என்று துலங்குகிறது” என்றருளினார்.

அதற்கு சுவாமி, “பக்தனுக்கு பக்தி செய்ய ஒரு கடவுள் தேவை. அவனுக்குக் கடவுளும் இல்லை பக்தனுமில்லை ஆன்மாதான் உண்டு என்று கற்பிக்க வேண்டுமா?” என்று கேட்டார்.

பகவான்: நிச்சயமாக சாதனைக்குக் கடவுள் தேவையே. ஆனால் பக்தி மார்க்கத்தில்கூட, பூரண சரணாகதிக்குப் பிறகே சாதனை முழுமை பெறுகிறது. அகம்பாவத்தை அழித்துவிட்டால் ஆன்மா எப்போதும்போல் ஒளிரும் என்பதைத் தவிர வேறென்ன அதற்குப் பொருள்? எந்த மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தாலும் 'நான்' என்பதிலிருந்து தப்பிக்க முடியாது. நிஷ்காம்ய கர்மத்தைச் செய்யும் ‘நான்', தான் தெய்வத்தைப் பிரிந்திருப்பதாக எண்ணி அவனை அடைய ஏங்கும் 'நான்', தன் உண்மை நிலையை விட்டு நழுவியதாக உணரும் 'நான்', இத்யாதி. இந்த 'நான்' என்பதின் மூலத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். பின் எல்லாச் சந்தேகங்களும் தெளிவாகி விடும். பகவத்கீதையில் எல்லா வழிகளும் ஆமோதிக்கப்பட்டாலும், ஞானியே உத்தமமான கர்மயோகி, உத்தம பக்தன், மிக உயர்ந்த யோகி என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.”

சுவாமி மேலும் பிடிவாதமாக, “ஆன்ம விசாரமே உத்தம மென்று சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் நடைமுறையில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு கடவுள் தேவைப்படுகிறது.”

பகவான்: பெரும்பாலானவர்களுக்குக் கடவுள் அவசியமே என்பது சரி. அவர்களும் கடவுளும் வேறல்ல என்று அறியும் வரை அவர்கள் கடவுளை நாடலாம்.

சுவாமி தொடர்ந்தார்: நடைமுறை வாழ்க்கையில் சாதகர்கள், மிகத் தீவிரமானவர்கள் கூட, மனம் தளர்ந்து, கடவுள் நம்பிக்கையை இழந்து விடுகிறார்கள். அவர்கள் நம்பிக்கையைப் புதுப்பித்து ஊக்குவிப்பது எப்படி? அவர்களுக்காக நாம் என்ன செய்ய வேண்டும்?

பகவான்: கடவுளிடம் நம்பிக்கையில்லை என்றால் பரவாயில்லை. தன்னில், தான் இருப்பதாக நம்புகிறானா இல்லையா? அவன் எங்கிருந்து வந்தான் என்பதை (தன் மூலத்தை) கண்டுபிடிக்கட்டும். 

சுவாமி: அப்படிப்பட்ட மனிதன், தான் வந்த மூலம் தன் பெற்றோரே என்பான்.

பகவான்: அவ்வளவு அறிவிலியாக இருக்க முடியாது. ஏனெனில் அவன் சாதகன் என்றுதான் முதலில் நீங்கள் ஆரம்பித்தீர்கள்.

பக்கம் 234

24-3-46

சுவாமி சம்புத்தானந்தாவின் கடைசிக் கேள்வியான, கடவுள் நம்பிக்கையை இழந்த மனிதனை, தன் மூலத்தைக் கண்டு பிடிக்கும்படி கூறினால், “தன் பெற்றோர்களே தனக்கு மூலம் என்று கூறுவான்” என்பதைக் குறிப்பிட்டேன்.

பகவான்: பெற்றோரே தன் மூலம் என்று சொல்லும் மனிதர்களும் இருப்பார்களா!

நான் கேட்டேன்: அப்படியானால் கடவுளையே நம்பாமல் ஜடப்பொருள்களை மட்டுமே உண்மை எனக் கொள்ளும் நாத்திகனைக் குறித்து நாம் என்ன சொல்ல முடியும்?

பகவான்: அவன் மெதுவாக, படிப்படியாக 'நான்' என்பதன் மூலத்தைக் கண்டு பிடிப்பான். முதலில் கஷ்டங்கள் அவனைத் தனக்கு அப்பாற்பட்ட, தன்னுடைய திட்டங்களை முறியடிக்கும் சக்தி ஒன்று உள்ளது; அது தனது கட்டுப்பாட்டுக்கு அப்பாற் பட்டது என்பதை உணர வைக்கும். பிறகு சடங்குகளில் ஆரம்பித்து முறையான வழிபாடுகளில் இறங்கி ஜபம், கீர்த்தனம், தியானம் இவற்றின் வழியே முதிர்ச்சி யடைந்து, விசாரணையைச் சென்றடைவான்.



பக்கம் 321

15-6-46

மாலையில் சந்நிதிக்குள் நான் சென்ற பொழுது பகவான், “நாம் பார்ப்பதெல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது; எப்போதும் மாறிக் கொண்டிருக்கும் இதற்கெல்லாம் ஆதாரமாக, மூலகாரணமாக ஏதோ ஒன்று மாறாததாக இருக்க வேண்டும்” என்றருளினார்.

சுப்பராமய்யா: இவையனைத்திற்கும் ஆதாரமாயிருப்பது மாறாததாக இருக்கவேண்டும் என்று கற்பனை செய்வதற்கு என்ன நிரூபணம் இருக்கிறது?

பகவான்: 'நான்' மாறாதது என்பது வெறும் எண்ணமோ கற்பனையோ அல்ல. அது எல்லோரும் உணர்ந்துள்ள ஓர் உண்மை. மாறிக்கொண்டிருக்கும் அனைத்துப் பொருள்களும் இல்லாத தூக்கத்தில் 'நான்' இருக்கிறது. அது கனவிலும் நனவிலும் இருக்கிறது. மற்றவை அனைத்தும் வருகின்றன போகின்றன. ஆனால் 'நான்' மாற்றமற்று இருக்கிறது.

ஆச்ரமத்திற்கு அடிக்கடி வரும் டாக்டர் எஸ். மணி (சென்னையில் உதவி இயக்குனர், பொது சுகாதாரத் துறை), பகவானிடம், “ஆனால் இப்பொருள்கள், அதாவது இந்த உலகம் தோன்றுவானேன்?” என்று கேட்டார்.

பகவான்: அது யாருக்குத் தோன்றுகிறது? நீர் பார்க்கிறீர்; அதனால் உலகம் இருக்கிறது. பார்ப்பவரைத் தவிர்த்து உலகம் தனியாக இருக்கிறதா? அது உம்மிடம் வந்து 'நான் இருக்கிறேன்' என்கிறதா? நீர் பார்ப்பதாக, உணர்வதாக சொல்வதைத் தவிர, அதன் இருப்பிற்கு வேறு என்ன நிரூபணம் உள்ளது?

நிலையில்லாக் காட்சியைக் காட்டும் / காணும் / காட்சியாகத் தோன்றும் நிலையானது எது?

 2022-02-18

நிலையில்லாக் காட்சியைக் காட்டும் / காணும் / காட்சியாகத் தோன்றும் நிலையானது எது?


  • காலம், இடம் என்பதன் பொய்மை (அதாவது இக்கணத்தில் தோன்றுவதல்லாமல் வேறு இருப்பு இல்லை; கனவிலும் காலம், இடம் வருகின்றது என்பதுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்)
  • மாறும் காட்சிகளுக்கு ஆதாரமாக இருக்கும் மாறா ஒன்று (என்ன பெயர் வேண்டுமென்றாலும் அதற்கு வைத்துக் கொள்ளலாம்)
  • அம்மாறும் காட்சிகளுக்குள் இந்த (நம்) உடல், மனம் என்பனவும் அடங்கும்.
  • பிறப்பு, வாழ்வு, இறப்பு, இன்பம், துன்பம் என்பன நம் உண்மை இருப்பு அல்ல‌
  • மாறா அவ்வொன்றே நம்மின் உண்மையான‌ இருப்பு (அறிவுணர்வு)
  • நான் இந்த உடல் மனம் மட்டுமே என்ற தனித்த ஒன்று என்பது கருத்துச் சிறை.
  • நானும் இருப்பும் ஒன்றே என்ற புரிதலில் நான் இந்த உடல் மனமும் தான் என்ற முழுமையில் சிறையும் (தளையும்) இல்லை; விடுதலை (மோட்சம்) என்பதும் இல்லை.
  • காண்பான், காணுதல், காட்சி மூன்று (திரிபுடி trio) ஒரு சேர எழுந்து மறைகின்றன
  • அம்மாறா ஆதாரமே (ஆன்மாவே) எல்லாத் தோற்றமாகவும் உள்ளது.
  • அம்மாறா ஆதாரம் இருப்பாகவும் (சத்), அறிவாகவும் (சித்) பேரின்பமாகவும் (ஆனந்தம்) உள்ளது. இப்பேரின்பம் என்பது இன்பம் துன்பம் என்ற இரட்டைகளுக்கு (துவைதம், duality) அப்பாற்பட்டது.
  • அம்மாறா ஆதாரமே எல்லையற்ற கட்டற்ற சுதந்திரம் (விடுதலை, வீடுபேறு, நிர்வாணம், மோட்சம்...); அதுவே நம் இயல்பு இப்போதே...
  • அவ்வியல்பு மறக்கப் படலாம்; மறைக்கப் படலாம். ஆனால் நீக்க முடியாது; விலக்க முடியாது; துறக்க முடியாது..


இப்படியான அம்சங்களை ஒவ்வொன்றாகத் தனித்தனியாகப் புரிந்து கொள்ள முயல்வது எல்லா ஐயங்களையும் (மறத்தல், மறைத்தல்) தீர்க்காது. ஆனால் முழுமையை நோக்கித் தள்ளும்.


இப்படியான புரிதல்கள் எல்லாமே ஒரே சமயத்தில் பொருந்தும் போதே முழுமை / உண்மை / வாக்கு மனம் கடந்த இருப்பு தெளிவாகிறது. 

பிரபஞ்சத்தின் நகைச்சுவை

 2022-02-18

பிரபஞ்சத்தின் நகைச்சுவை - Universal Joke


2022-02-05

தேவா:

 

இன்று படித்ததில்   பிடித்தது

பவுத்தர் ஆன்மா இல்லை என்பர். எல்லாம் சூனியமே. உலகத்தில் யாதொரு பொருளும் இல்லை. எல்லாம் சூனியமே. ஆன்மா என்பதும் சூனியமே.


சூனியான்மை வாதம் கூறுவோர் பொறி, மனம் முதலியவற்றை ஒவ்வென்றாக காட்டி இது ஆன்மாவா, இது ஆன்மாவா என கேட்டு, இல்லை என்ற பதிலைப் பெற்று ஆன்மா இல்லை என கூறுவர்.  

 

ஆனால் ஆன்மா இல்லை என மறுப்பதே உண்டு என உணர்த்தும் ...  எப்படி?

 

உடல், மனம் மற்றும் பொறி முதலியவற்றை எடுத்து ஆராய்ந்து, இது ஆன்மா அன்று என்று கழித்த அறிவு உள்ளதே, அவ்வறிவே ஆன்மா.


2022-02-05

தொல்:

ஆன்மா = அறிவுணர்வு = அறிதல் + அறிவதை உணர்தல். This is not the ‘soul’ of any individual person. This is the one impersonal field of awareness.

 

இது நம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உள்ளதாகச் சொல்லப்படும் நம்பப்படும் 'ஆவி' / 'ஆன்மா' என்பதைக் குறிக்கவில்லை. இது எல்லாவற்றிற்கும் ஆதாரமாய், பின்புலமாய் உள்ள ஒரே அறிவுணர்வுப் புலத்தைக் குறிக்கிறது.

 

Even current physicalist scientists and philosophers (Daniel Dannett) claim free-will and self-consciousness are illusions, based on their version of interpretation of experimental results without realising the irony - who is saying this, who is self-conscious of saying this? Is this saying out of free will or predetermined?


இன்று பௌதீகவாதிகளாக உள்ள அறிவியல் அறிஞர்கள், தத்துவவாதிகள் (டேனியல் டென்னட்) கூட இச்சா சுதந்திரம், தன்னுணர்வு போன்றவை மாயை என்று அறிவியல் பரிசோதனை முடிவுகளுக்கு அவர்கள் பாணியில் பொருள் கொண்டு சொல்கிறார்கள். ஆனால் அப்படிச் சொல்வதில் உள்ள முரண்பாட்டை அவர்கள் அறிந்துள்ளார்களா? இவை மாயை என்று யார் சொல்வது? அப்படிச் சொல்வதை யார் அறிந்து கொள்வது? அப்படிச் சொல்லப்படுவது இச்சா சுதந்திரத்திலா அல்லது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதாலா?



First you create a false separation of I and the rest and then split the ‘I’ into body and mind (physical and non-physical) and ask all sorts of unanswerable and unnecessary questions (do we have free will, is self-consciousness real, where did we come from…) and produce contradicting and conflicting answers and above all feel that you are doing a very intelligent work and progressing science / mankind, if not improving the universe. We cannot but laugh at ourselves! Maybe that is the idea! Universal joke!!


முதலில் நான் பிற என்று இருப்பைப் பிரிப்பது, பின் நான் என்பதை உடல் மனம் என்று பிரித்து கொள்வது பிறகு தேவையற்ற விடை காண முடியாத கேள்விகளைக் (இச்சா சுதந்திரம், தன்னுணர்வு உண்டா, நாம் எங்கிருந்து வந்தோம்...) கேட்டு அவற்றிற்கு முரண்பாடான, பொருந்தாத விடைகளைச் சொல்வது, இப்படிச் செய்வதை எல்லாவற்றிற்கும் மேலாக அறிவுக் கூர்மையான ஆய்வு என்றும் அவ்வழி அறிவியலை, மனித குலத்தை, ஏன் பிரபஞ்சத்தையே முன்னேற்றுவதாக நினைத்துக் கொள்வது... வேடிக்கை தான், நம்மை நினைத்து நாமே சிரித்துக் கொள்ள வேண்டியதுதான். ஒரு வேளை அது தான் பிரபஞ்சத்தின் அர்த்தமோ? பிரபஞ்சத்தின் நகைச்சுவை!


Similar contradiction is in saying that evolution doesn’t have any goal (progress) and then talking about human beings accumulating knowledge and making progress (stone age, bronze age, agricultural age, industrial age, information age…). Have human beings somehow risen above evolution (natural process)? If this is not a belief in the supernatural, what is it? I am not making this up. Richard Dawkins (Author of Selfish Gene book) mentioned that ‘we humans alone have the capability to rise above our genes’. This is nothing but the religious concept of redemption hiding in rationality. Scientific blabberings are no less crazy than religious! 


இது போன்ற இன்னொரு முரண்பாடு என்னவென்றால் பரிணாம வளர்ச்சிக்கு எந்த நோக்கமும் இலக்கும் இல்லை என்று சொல்லிக் கொண்டே மனிதர்கள் அறிவைச் சேகரித்துப் படிப்படியாக (கற்காலம், உலோகக் காலம், விவசாயக் காலம், தொழிற்ப்புரட்சிக் காலம், தகவல் புரட்சிக் காலம்...) முன்னேறி வருவதாகவும் நம்புவது. மனித விலங்கு இயற்கை செயல்முறையைத் தப்பித் தாண்டி சென்று விட்டதா? இப்படி நம்புவது இயற்கை மீறிய அற்புதத்தை நம்புவதைப் போன்ற‌தல்லாமல் வேறு என்ன? இதை நாம் இட்டுக் கட்டவில்லை. மிகப் பிரபலமான உயிரியல் விஞ்ஞானி ரிச்சார்ட் டாக்கின்ஸ் (சுயநல மரபணு என்ற நூலின் ஆசிரியர்), 'மனிதர்கள் மட்டுமே மரபணு ஆதிக்கத்தை வெல்லக் கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள்' என்று சொல்லியுள்ளார். மதங்கள் மனிதர்க்குச் சொல்லும் மீட்பு, இரட்சிப்பைப் (ஏசு மீட்பார், இரட்சிப்பார், கலியுக அவதாரம் மனித குலச் சீரழிவைத் தடுத்து மீட்டு எடுக்கும்...) போன்றதே இது; ஒரே வேறுபாடு இது பகுத்தறிவு, அறிவியல் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டுள்ளது. இவை போன்ற அறிவியல் உளறல்கள் மத உளறல்களுக்கு சற்றும் சளைத்தவை அல்ல.

 


Science is an expression of nature and much more consistent, structured, intellectually exciting (albeit the underlying assumptions which cannot be proved) and useful but that is not the only valid domain of knowledge. Other domains (religion, spiritual, arts, literature, philosophy, metaphysics, politics, economics…) all have equal validity and usefulness as they are all expressions of the same nature/existence.


இயற்கையின் வெளிப்பாடான அறிவியல் (அத‌ன் அடிமட்டத்தில் நீரூப்பிக்கவோ பொய்பிக்கவோ இயலாத அனுமானங்களைக் கொண்டிருந்தாலும்) நன்கு கட்டமைக்கப்பட்ட, பெரும்பாலும் ஒன்றொடு ஒன்று ஒத்து பொருந்தி வருகின்ற, பெரும் உற்சாகத்தை, வியப்பை வழங்கக் கூடிய அதே நேரத்தில் அன்றாட வாழ்வுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும். ஆனால் அது மட்டுமே செல்லுபடியான அறிவுத்துறை அன்று. மற்ற அறிவுத்துறைகளும் (மதம், ஆன்மீகம், கலை, இலக்கியம், தத்துவம், மீமெய்யியல், அரசியல், பொருளியல்...) செல்லுபடியானவையே; பயனுள்ளவை. ஏனெனில் அவையும் இயற்கையின் இருப்பின் வெளிப்பாடுகளே.

 

Validity and truth (right value) are not the same. Say in a database record of a person, in the field for date-of-birth a valid date (syntactically correct) may be stored but it may not be the correct value (semantically correct) of (DOB of) that person. Similarly science provides the right value in some context and other domains provide right values in other contexts. No frame of reference is absolute.

 

செல்லுபடியாவதும் சரியானதும் ஒன்று ஆகி விடாது. ஒருவரின் பிறந்த நாளைக் டேடாபேஸ்ஸில் (தரவுத்தளம்) பதிவு செய்யும் அட்டவணைப் புலத்தில் (டேபிள் பீல்ட்) நாள்காட்டியில் உள்ள எந்த நாளும் செல்லுபடியானதாக இருக்கலாம். ஆனால் அது சரியான பிறந்த நாளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதை ஒப்பிட்டுச் சரிபார்க்கும் போது தவறு தெரிய வரலாம். எடுத்துக்காட்டாக ஒருவர் வேலையில் சேர்ந்த நாளை விட அவரின் பிறந்த நாள் பின்னதாக இருக்க முடியாது. அதே போல் அறிவியல் ஒரு சூழலில் சரியான அறிவைத் / புரிதலைத் தரலாம்; பிற அறிவுத்துறைகளும் பிற சூழல்களில் சரியான அறிவைத் / புரிதலைத் தரலாம். எந்த ஒரு அறிவுத்துறைக்கும் முற்றான முழுமையான பார்வை, இருப்பு இல்லை. 


2022-02-06


ஒருவர்:


ஆன்மாவும் இல்லை;  ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. நமது உடலில் ஒரு இயக்கத்தின் வெளிப்பாடே உயிர் என கொள்ளலாம். அஃறிணையான ஒரு பொருளின் இயக்கம் ஏதாவது காரணத்தினால் தடைப்பட்டால் அது நின்று விடுகிறது. பின்னர் அதை சரி செய்தால் அது இயங்குகிறது.

உதாரணமாக கார் ஏதோ ஒரு கோளாறினால் நின்று விட்டால் அதன் காரணத்தை கண்டு பிடித்து சரி செய்து பழைய நிலைக்கு கொண்டு வருவது போல உயிரையும் எதிர்காலத்தில் சில மர்ம முடிச்சுகளை அதாவது முதுமையை அடையவைக்கும் செல்களால் ஆன உடல்கூறுகளை அதன் நிலையை மருத்துவரீதியாக மாற்ற விஞ்ஞானிகள் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அது வெற்றி பெற்று விட்டால் இறப்பை அதாவது உடல் இயக்கத்தை நீட்டிக்க வைப்பது சாத்தியமே! எனவே உடல் இயக்கம் நின்று விடும் முன் உயிர்ப்பிக்க அறிவிலை நாடலாம்; இல்லையேல் அது நின்று விட்டால் அது இயற்கையின் இறுதி கட்டம்.

அவ்வளவு தான்! இதில் ஆன்மா இல்லை! இல்லை! இல்லவே இல்லை!!!!!


தொல்:

பதிவில் சொல்லப்பட்டதாகக் கருதிக் கொண்டு (அதாவது நம் ஒவ்வொருவருக்கும் தனித் தனியான ஆன்மா உள்ளதாக) நீங்கள் மறுத்துள்ளதை, அப்பதிவிலியே மறுக்கப் பட்டுள்ளது: ஆன்மா = அறிவுணர்வு = அறிதல் + அறிவதை உணர்தல். This is not the ‘soul’ of any individual person. This is the one impersonal field of awareness. அதனால் உங்கள் கருத்து சரியே. ஆனால் பதிவில் சொல்லப் பட்டுள்ள கருத்து சற்று மாறுபாடானது; ஒரு வகையில் மிக எளிமையானது.


ஆன்மா, ஆன்மீகம் என்ற வார்த்தைகளைக் கேட்டவுடனே அவற்றிற்கு நடப்பில் உள்ள அர்த்தங்கள் நம்மை ஆதரவு, எதிர் நிலைகளை எடுக்கத் தள்ளுகின்றன. பகுத்தறிவுவாதியான ஒரு நண்பர், இந்த ஆன்மா, ஆன்மீகம் என்ற சொற்களைத் தவிர்த்து விடலாமே என்று சொன்னார். அது மேற்கண்ட‌ வகையில் சரியே.



அதனால் தான் ஆன்மா = அறிவுணர்வு என்ற மாற்றுச் சொற்றொடர் பயன்படுத்தப் பட்டு அதன் விளக்கமும் (அறிதல் + அறிதலை உணர்தல் knowing + knowing that knowing) தரப்பட்டுள்ளது.


அதே நேரத்தில் நாம் சொல்ல வருவது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது என்ற நோக்கிலும் வார்த்தைகளின் குறியீட்டுத் தன்மையைப் புரிந்து கொள்ளும் நோக்கிலும் நடைமுறை வார்த்தைகளில் நாம் புரிந்து கொண்டுள்ள விதத்தில் உள்ள தவறைச் சுட்டிக் காட்டும் நோக்கிலும் அவற்றைப் பயன்படுத்துவது தேவைப்படுகிறது.


நடிகர் ரஜினியின் ரசிகர் ஆக இருந்து இப்போது பகுத்தறிவு, பெரியார்வாதியாக மாறி விட்டார் என்று அப்பா மறைமலை நகரில் ஒரு இளைஞரை அறிமுகப்படுத்தினார். அவரிடம், முன்பு ரஜினியின் நடிகராக இருந்தது சரியில்லை, முட்டாள்தனம் (திரைப்படத்தை ரசிப்பது வேறு; அது பலருடை கூட்டு முயற்சி) என்று புரிந்து கொண்டு இப்போது பெரியார் கருத்துகளே சரி என்ற முடிவுக்கு வந்துள்ளீர்கள், இல்லையா என்று கேட்டேன். ஆமாம் என்றார். அப்படியானால் பெரியார் கருத்துகள் சரியில்லை என்று எதிர்காலத்தில் நினைக்க வாய்ப்பு இருக்கலாம் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு அவர் திகைத்தார். கேட்ட போது அப்பாவும் பக்கத்தில் இருந்தார்கள். பெரியார்வாதி என்பது ஒரு அறிவுத் தேடலின் தொடக்கமே, அதுவே முடிவன்று. பெரியாரும் தன்னைப் போன்ற பிற்போக்குவாதி இருந்தான் என்று சொல்லும் படியாக அறிவு, சிந்தனை வளர்ச்சி எதிர்காலத்தில் வர வேண்டும் என்றே சொல்லியுள்ளார் என்று குறிப்பிட்டேன்.


எல்லா அறிவும் (கருத்துகளும்) தற்காலிகமானதே என்று புத்தர் சொல்லியுள்ளார். இதையே ஆதிசங்கரின் ரமணரின் அத்வைதமும் சொல்கிறது என்பது நமக்கு (அதை அப்படி யாரும் சொல்லாததால், அதைப் படிக்காததால்) புதிதாக இருக்கலாம். மேலும் அதை அவர்கள் கடவுள், பிரம்மம், ஆன்மா என்ற சொற்களோடு சேர்த்து சொல்லும் போது கசப்பாகவும் இருக்கலாம்.


நமக்கு ஏற்கனவே தெரிந்தவை நம் சிந்தனையை வழி நடத்தவும் செய்யும்; வழி தவறவும் செய்யும். அதைப் பிரித்து அறிய ஏற்கனவே தெரிந்தவைகளுக்கு நாம் அடிமை ஆகாமல் அவற்றை மறு ஆய்வு தொடர்ந்து செய்ய வேண்டியுள்ளது. அதுவே அறிவு விடுதலைக்குத் தருவதாகும். இதற்கு ஒருவர் எந்த வாதியாகவும் (ஆன்மீகவாதி, பெரியார்வாதி...) இருக்கலாம்; இல்லாமலும் செய்யலாம்.

திருஷ்டிசிருஷ்டி - சிருஷ்டிதிருஷ்டி - பரிபூரணம் [உலகம் (அறிவுணர்வாக / பிரம்மமாக) முழு உண்மை]

 2022-02-18


திருஷ்டிசிருஷ்டி - சிருஷ்டிதிருஷ்டி - பரிபூரணம் [உலகம் (அறிவுணர்வாக / பிரம்மமாக) முழு உண்மை]


அனுதினமும் ஸ்ரீ பகவானுடன்

தேவராஜ முதலியார் நாட்குறிப்பிலிருந்து ‍- மார்ச் 16, 1945 முதல் ஜனவர் 4, 1947 வரை

 

பக்கம் 220-221

 

கடிதம் மேலும் தொடர்ந்தது, “ரமண மகரிஷி அத்வைத வேதாந்தத்தின் அஜாத வாதத்தின் பிரதிநிதி. அது சிறிது கடினமானது தான்” இது பற்றி பகவான் குறிப்பிட்டார், “யாரோ அவரிடம் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். நான் அஜாத வாதத்தை மட்டும் போதிக்கவில்லை, நான் எல்லாக் கொள்கைகளையும் ஆமோதிக்கிறேன். 

 

கேட்பவரின் சக்திக்குத் தக்கப்படி ஒரே உண்மையை வெவ்வேறு விதமாக வெளியிட வேண்டியிருக்கிறது. அஜாத கொள்கை, ஒரு உண்மையைத் தவிர வேறொன்றும் இருப்பதில்லை. பிறப்பு, இறப்பு, நீட்டல், சுருக்கல், சாதகன், முமுக்ஷ, முக்தி, பந்தம், விடுதலை ஒன்றுமே இல்லை; ஒன்றே ஒன்று மட்டுமே உள்ளது என்கிறது. 

 

இந்த உண்மையை ஜீரணிக்க முடியாதவர்களுக்கு, ‘சுற்றுமிருக்கும் கன உலகை எப்படி அலட்சியம் செய்வது?' என்று கேட்பவருக்கு, கனவு அனுபவத்தைச் சுட்டிக்காட்டி, 'நீ பார்ப்பதெல்லாம் காண்பவனைச் சார்ந்துள்ளன ; காண்பவனை விட்டுக் காட்சி இல்லை என்று தெரிவிக்கப் படுகிறது.' இதற்கு திருஷ்டிசிருஷ்டி வாதமென்று பெயர். அதாவது மனதிலிருந்து சிருஷ்டித்து, தன்மனம் சிருஷ்டித்ததையே ஒருவன் பார்க்கிறான். 

 

இதையும் கிரகிக்க முடியாமல் மேலும், கனவு மிகச்சிறிய காலமே; ஆனால் உலகோ, எப்போதுமே இருக்கிறது! கனவு எனக்கு மாத்திரம்; இந்த உலகை, என்னைத் தவிர மற்றவர்களும் பார்த்து அனுபவிக்கிறார்கள். அப்படிப்பட்ட உலகுக்கு இருப்பு இல்லை என்று கூற முடியாது என்று வாதிப்பவர்களுக்கு, சிருஷ்டிதிருஷ்டி வாதம் அளிக்கப் படுகிறது. 

 

அதில், 'கடவுள் முதலில் இன்ன விஷயத்தை இன்ன பொருளிலிருந்து சிருஷ்டித்தார், பின்னர் அவற்றிலிருந்து மற்ற பொருள்கள் படைக்கப்படுகிறது' என்று போதிக்கப்படுகின்றன. இந்தச் சாரார்க்கு இது மட்டுமே திருப்தியளிக்கும். 

 

இல்லாவிட்டால் அவர்கள் மனம் திருப்தியடையாமல் தம்மைத்தாமே, 'எப்படி எல்லா பூகோளம், எல்லா வரைபடங்கள், அனைத்து விஞ்ஞானங்கள், நட்சத்திரங்கள், கோளங்கள், அவற்றை செலுத்தும் நியதிகள், அல்லது அதற்கு சம்பந்தப்பட்டவை, முதலிய எல்லா அறிவும் முழுவதும் பொய்யாக இருக்குமா?' என்று கேட்டுக் கொள்வார்கள். இவர்களுக்கெல்லாம், 'ஆம். கடவுள் இவற்றை யெல்லாம் சிருஷ்டித்தார். அதனால், நீ பார்க்கிறாய்' என்று சொல்வது உத்தமம்.” 

 

டாக்டர் மசாலாவாலா, “இவை யெல்லாமே உண்மையாக முடியாது. ஏதாவது ஒரு சித்தாந்தமே உண்மையாக இருக்க முடியும்” என்று கூறியதற்கு பகவான், “இவையனைத்தும் கற்பவனின் பக்குவத்திற்குப் பொருந்தும்படி விளக்கப்படுகிறது. பரிபூரணம் ஒன்றாகத்தானே இருக்க முடியும்” என்று விளக்கினார்.

 

பக்கம் 242-243

 

இதிலிருந்து, பலவித தத்துவ மார்க்கங்களைப் பற்றிப் பேச்சு திரும்பியது. உண்மை ஒன்றே உள்ளது என்று ஒரு சாரார்; மூன்று சாச்வத உண்மைகள் ஜகத், ஜீவன், ஈஸ்வரன் அல்லது பதி, பசு, பாசம், உள்ளன என்று மற்றொருவர். 

 

இது சம்பந்தமாக பகவான் சற்றே நகைச்சுவையுடன் கூறினார், “அத்வைதிகள்  அல்லது சங்கரருடைய சார்புடையவர்கள் உலகின் இருப்பை மறுக்கிறார்களென்றோ, அதை மித்தை என்று சொல்கிறார்களென்று சொல்வதோ சரியே அல்ல. 

 

 

மாறாக, மற்றவர்களை விட அவர்களுக்கு உலகம் அதிக உண்மையாக இருக்கிறது. அவர்களுடைய உலகம் என்றும் இருக்கும். மற்றவர்களுடைய உலகத்திற்கு ஆரம்பம், வளர்ச்சி, அழிவு மூன்றும் இருப்பதால் அது உண்மை ஆகாது. 

 

 

ஆனால் அத்வைதிகள் சொல்லும் உலகத்தை உலகமாக மட்டுமே கண்டால் அது உண்மையல்ல. மாறாக உலகத்தை, பிரம்மமாகக் கண்டால் அது உண்மை, சத்தியம். அனைத்தும் பிரம்மம், பிரம்மத்தைத் தவிர எதற்கும் இருப்பில்லை. உலகம் பிரம்மமாக இருப்பது சத்தியம். இவ்விதமாக அவர்கள் மற்ற சாராரைவிட உலகுக்கு அதிகம் இருப்பு தருகின்றனர். 

 

 

உதாரணமாக மூன்று அடிப்படைகளை நம்பும் சாராருக்கு, உலகம் மூன்றில் ஒரு பங்கே உண்மை;

ஆனால் அத்வைதிகளுக்கோ உலகம் பிரம்மமென முழுதும் உண்மையானது; உலகமும் சத்தியமும் வேறல்ல. 

 

 

அது போலவே மற்ற சாரார்கள் கடவுள் அல்லது பிரம்மத்திற்கு மூன்றில் ஒரு பங்கே உயர்நிலை தருகிறார்கள். மற்ற இரண்டு அடிப்படைகளும் கடவுளின் சத்தியத்தின் எல்லையைச் சுருக்குகின்றன. 

 

 

ஆகையால், சங்கரரை மாயாவாதி என்று யாராவது கூறினால், ‘சங்கரர் மாயை என்பதே இல்லை என்கிறார் என்று எதிர்வாதிக்கலாம். மாயையின் இருப்பை மறுத்து அதை மித்யை (பொய்) என்பவரை எப்படி மாயாவாதி என்பது?

 

 

யாரொருவர் மாயையின் இருப்பை ஒப்புக்கொண்டு, உலகை அதன் சிருஷ்டி என்கிறார்களோ, அவர்களே மாயாவாதிகள். ஈசன் இல்லை என்பவனை ஈசுவரவாதி என்று சொல்ல முடியாது. ஈசுவரனுடைய இருப்பை ஊர்ஜிதம் செய்பவனையே அப்படிச் சொல்ல முடியும்.” 

 

 

பகவான் தொடர்ந்தார், “உண்மையில் இவையனைத்தும் வீண் வாதங்களே. இத்தகைய சர்ச்சைகளுக்கு முடிவே இல்லை. செய்ய வேண்டிய சரியான காரியம் என்னவென்றால், யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லாததும் அனைத்தும் மறைந்தும், தூக்கத்தில் உள்ளதுபோல, மறையாமல் விளங்கும், அந்த 'நான்' என்பதைக் கண்டுபிடிப்பதே. பிறகு இத்தகைய சந்தேகங்களுக்கும் வழக்குகளுக்கும் ஏதாவது இடமிருக்கிறதா என்று பாருங்கள்” என்றருளினார்.


2022-02-14


தொல்:

இன்றைய அறிவியல் புரிதல் விளக்கத்தின் படி நாம் காண்பன அனைத்தும் (புற உலகம், காலம், இடம், நம் உடல், எண்ணங்கள், உணர்ச்சிகள்...) நம் மூளையில் நரம்புச் சமிஞ்கைகளின் விளைவே. அதாவது நாம் பார்ப்பது எதுவும் உண்மையில் இருப்பதற்குச் சான்று எதுவும் கிடையாது. ஏனெனில் எல்லாச் சான்றுகளும் மூளையில் நரம்புச் சமிஞ்கைகளின் விளைவே. இஃது அபத்தம்.

 

மாறாக, அத்வைதத்தின் படி, நான் காண்பன எல்லாம் உண்மையில் இருக்கின்றன. அவை மாறா பின்புலத்தில் தோன்றும் காட்சிகளாக மிக உண்மையானவை.

 

எடுத்துக்காட்டாக, நாம் பார்க்கும் சூரியன், அறிவியல் புரிதலின் படி நம் மூளையில் தோன்றுவதே (அந்த மூளை எங்கு தோன்றுகிறதோ?).

 

அத்வைதத்தின் படி நாம் பார்க்கும் சூரியன், நம் உடல், மூளை உள்பட உண்மை. ஆனால் மாறிக் கொண்டே இருப்பவை என்ற பார்வையில் அவை நிலையற்றவை. அவற்றைக் காணும் மாறா அறிவுணர்வே நிலையான உண்மை.

 

அத்வைதத்தின் படி அறிவியலும் அதன் கண்டு பிடிப்புகளும் விளக்கங்களும் அத்தகைய காட்சி என்ற அளவில் உண்மைகளே. இந்த அடிப்படையில் காட்சிகளுக்குள் தோன்றுவனவற்றிற்கிடையே உள்ள பொருத்தங்கள் (correlations) உண்மையே. அதாவது எண்ணங்களுக்கும் அதனால் மூளையில் விளையும் நரம்பு சமிஞ்கை வலைப் பின்னல்களுக்கும் (patterns) இடையே உள்ள பொருத்தம். இதைத் தவறாகப் புரிந்து கொண்டு மூளைதான் எண்ணங்களை உருவாக்குகிறது என்று முடிவு செய்யும் போது அது முதல் பத்தியில் சொன்ன அபத்தத்திற்கு இட்டுச் சென்று விடுகிறது.

 

அத்வைதம் என்பது ஒரு கருத்து. அதைப் பிடித்துக் கொண்டிருப்பதே அத்வைதம் இல்லை. எப்படித் தண்ணீர் என்ற சொல், கருத்து தாகத்தைத் தணிக்காதோ, தாகத்தைத் தணிப்பதற்குத் தண்ணீர் என்ற பொருள்தான் வேண்டுமே தவிர தண்ணீர் என்ற சொல்லோ கருத்தோ அன்றோ (மனிதனைத் தவிர மற்ற விலங்குங்கள் தண்ணீர் என்ற சொல், கருத்து இல்லாமலே தண்ணீரைப் பருகி வாழ்கின்றன). அதே போல் அத்வைதம், அறிவியல் என்ற சொற்களை, கருத்துகளைக் குறித்து விருப்பு வெறுப்பு கொள்ளாமல் அவற்றின் வாயிலாகத் தேடப்படுவ‌தில், சுட்டிக் காட்டப்படுவதில் கவனம் செலுத்தினால் பயனுண்டு.

 

2022-02-14


தேவராஜ்:


“அத்வைதத்தின் படி நாம் பார்க்கும் சூரியன், நம் உடல், மூளை உள்பட உண்மை. ஆனால் மாறிக் கொண்டே இருப்பவை என்ற பார்வையில் அவை நிலையற்றவை. அவற்றைக் காணும் மாறா அறிவுணர்வே நிலையான உண்மை”

 

மாற்றம் ஒன்றே மாறாதது

 

மாறா அறிவுணர்வு இருக்க முடியுமா?  அறிவுணர்வும் மாறுமல்லவா?

 

மாற்றம் மட்டும்தான் நிரந்தரம். அனைத்து உயிரினங்களும், அவற்றுக்கே உரித்தான குணங்கள் மற்றும் பண்புகளை உள்ளடக்கியிருக்கின்றன. அவை நிலையானது என, நம்பப்படுகிறது.

 

ஆனால், அனுபவத்தில் என்ன காண்கிறோம்? அன்பு வெறுப்பாகிறது; வெறுப்பு பாசமாகிறது; கோபம், சாந்தமாகிறது; சாந்தத்தை கோபம் காலி செய்கிறது. அதாவது மனிதனின் குணம் மாறி கொண்டே இருக்கிறது.

 

ஏன்? தேவை, வசதி, வாய்ப்பு, சூழ்நிலைக்கு ஏற்ப, ஆபத்தை தவிர்த்து, நன்மை கருதி, குணம் மாறுபடுகிறது; மாற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறது. இதைத்தான் மாற்றம் ஒன்றே மாறாதது; மாற்றம் மட்டும்தான் நிலைத்திருக்கும் என்கிறோம்.


2022-02-14


தொல்:


ரமணரிடம் இது போன்ற கேள்வி கேட்ப்பட்டு பதிலளித்துள்ளார். கீழே பார்க்கவும்.


=======

அனுதினமும் ஸ்ரீ பகவானுடன்

தேவராஜ முதலியார் நாட்குறிப்பிலிருந்து ‍- மார்ச் 16, 1945 முதல் ஜனவர் 4, 1947 வரை



பக்கம் 321


15-6-46


மாலையில் சந்நிதிக்குள் நான் சென்ற பொழுது பகவான், “நாம் பார்ப்பதெல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது; எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் இதற்கெல்லாம் ஆதாரமாக, மூலகாரணமாக ஏதோ ஒன்று மாறாததாக இருக்க வேண்டும்” என்றருளினார்.


சுப்பராமய்யா: இவையனைத்திற்கும் ஆதாரமாயிருப்பது மாறாததாக இருக்கவேண்டும் என்று கற்பனை செய்வதற்கு என்ன நிரூபணம் இருக்கிறது?


பகவான்: 'நான்' மாறாதது என்பது வெறும் எண்ணமோ கற்பனையோ அல்ல. அது எல்லோரும் உணர்ந்துள்ள ஓர் உண்மை. மாறிக்கொண்டிருக்கும் அனைத்துப் பொருள்களும் இல்லாத தூக்கத்தில் 'நான்' இருக்கிறது. அது கனவிலும் நனவிலும் இருக்கிறது. மற்றவை அனைத்தும் வருகின்றன போகின்றன. ஆனால் 'நான்' மாற்றமற்று இருக்கிறது.


ஆச்ரமத்திற்கு அடிக்கடி வரும் டாக்டர் எஸ். மணி (சென்னையில் உதவி இயக்குனர், பொது சுகாதாரத் துறை), பகவானிடம், “ஆனால் இப்பொருள்கள், அதாவது இந்த உலகம் தோன்றுவானேன்?” என்று கேட்டார்.


பகவான்: அது யாருக்குத் தோன்றுகிறது? நீர் பார்க்கிறீர்; அதனால் உலகம் இருக்கிறது. பார்ப்பவரைத் தவிர்த்து உலகம் தனியாக இருக்கிறதா? அது உம்மிடம் வந்து 'நான் இருக்கிறேன்' என்கிறதா? நீர் பார்ப்பதாக, உணர்வதாக சொல்வதைத் தவிர, அதன் இருப்பிற்கு வேறு என்ன நிரூபணம் உள்ளது?


=======



'மாற்றம் ஒன்றே மாறாதது / நிரந்தரம் / நிலைத்திருக்கும்' என்ற சொற்றொடர் குறிப்பது என்ன? மாற்றம் தொடர்ந்து இருந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும் என்பதே. 'மாறாதது / நிரந்தரம் / நிலைத்திருக்கும்' என்ற சொல் 'தொடர்ந்து மாறும்' என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது சொல் விளையாட்டு. இவை போல் நிறைய உள்ளன. எடுத்துக்காட்டு: நகர்த்த முடியாத ஒன்றை எல்லையில்லாதை வலிமை கொண்ட ஒருவன் (கடவுள்) நகர்த்த முடியுமா? இவை கவிதை, பாடல், இலக்கிய அறிவுக்களத்திற்கு சுவைக்காக உரியது. தர்க்கக்களத்திற்கு ஒத்து வராதவை.


மாறா அறிவுணர்வு இருக்க முடியுமா? அறிவுணர்வும் மாறும் அல்லவா? என்ற கேள்விகள் 'அறிவுணர்வு' என்பதைப் பற்றிய புரிதலில் உள்ள இடைவெளியைக் காட்டுகிறது.


எடுத்துக்காட்டாக, அறிவுணர்வு என்பது திரை என்று கொண்டால், திரையில் தோன்றும் எந்தவிதமான காட்சிகளாலும் பாதிக்கப் படாமல் திரை இருக்கிறது.


அறிவுணர்வு (திரை) மாறிக் கொண்டு இருந்தால் காட்சியை ஒழுங்காகப் பார்க்க முடியாது. 


வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் அறிவுணர்வு என்னவாக மாறும்? அப்படி மாறுவதை எஃது அறியும்?


அறிவுணர்வு என்பது எண்ணம், சிந்தனை, புரிதல்... இவை அன்று. எல்லாவற்றையும் அறிகின்ற அறிவு, எல்லாவற்றையும் வெளிப்படுத்துகின்ற ஒளி... இப்படி பலவிதமாக அதைச் சுட்டிக் காட்டலாம். ஆனால் உண்மையில் சுட்டிக் காட்டப்படுவது எதுவென்றால் எது சுட்டிக் காட்டுகிறதோ அதைத்தான்.



2022-02-15


தொல்:


மாறா 'நான்' / 'அறிவுணர்வு' என்பது ரமணர் சொல்வது போல் எண்ணமோ, கற்பனையோ அன்று. நம் ஒவ்வொருவர் வாழ்விலும் குழந்தையாக இருந்த போது இருந்த 'நான்' / 'அறிவுணர்வு' ('நான்' என்ற கருத்து அன்று) இன்று வரை அதுவாகவே இருக்கின்றது. அது ஒருவரின் வாழ்வில் மட்டுமன்று, எல்லோரின் வாழ்விலும் அது அதுவாகவே இருக்கிறது.

 

எனக்குள்ள 'நான்' / 'அறிவுணர்வு' என்பது உனக்குள்ள 'நான்' / 'அறிவுணர்வு' என்பதும் ஒன்றே.

 

என் உடலில் உள்ள கார்பன் அணுவும் உன் உடலில் உள்ள‌ கார்பன் அணுவும் ஒன்றே (ஒரே இயல்பு கொண்டவையே). அது போல் தான் 'நான்' / 'அறிவுணர்வு' என்பதும். அது ஆணும் இல்லை; பெண்ணும் இல்லை. அந்த அறிவுணர்வில் தோன்றும் உடல்கள் ஆண், பெண்.... எனப் பலவாக இருக்கின்றன. 

 

எடுத்துக்காட்டாக, கனவுகளற்ற ஆழந்த தூக்கம் அரசனுக்கும் பிச்சைக்காரனுக்கும் ஒன்றுதான். அந்த ஒருமைக்கு என்ன அடிப்படை? அந்த ஒருமை இருவருக்கும் இருக்கும் 'நான்' / 'அறிவுணர்வு' என்பதன் ஒரே இயல்பே.

 

இதை எவ்வளவு விவாதித்தாலும் நிரூபிக்க முடியாது. அதை ஒவ்வொருவரும் அவரவர்களாகவே பகுத்தறிவைக் கொண்டு 'பார்க்க' வேண்டும். அதில் 'நான்' என்ற கருத்து (concept / ego) எழும் முன் குழந்தையாக இருந்த போது, கனவுகளற்ற ஆழந்த தூக்கத்தில் இருப்பது, ஒரு வேலையில் தன்னை மறந்து ஆழ்ந்து (in the flow) இருக்கும் போது (செய்பவன், செயல், செயப்படும் பொருள் என்ற பிரிவினை இன்றி) உள்ள அனுபங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

 

ஆக, தர்க்கம் (பகுத்தறிவு) அனுபவம் இரண்டையும் கொண்டு, நமக்கு ஏற்கனவே கற்பிக்கப் பட்டுள்ளவற்றை ஒதுக்கி வைத்து விட்டு, பார்த்தால் யாருக்கும் விளங்கும். 

 

பெரியாரின் பகுத்தறிவிற்கும் ரமணரின் (ஆதி சங்கரரின்) பகுத்தறிவிற்கும் எந்த முரண்பாடும் இல்லை. இரண்டும் ஒன்றே. இரண்டின் களம் (உலகியல் / லௌகீகம் - மெய்யியல் / ஆன்மீகம்) வேறு என்று வேண்டுமானால் சொல்லலாம். அது கூட ரமணரின் பகுத்தறிவை (அத்வைதம்) ஆழ்ந்து புரிந்து கொண்டால் (அறிவுணர்வே / பிரம்மமே / நானே உலகமாக இருக்கிறது) அவ்வேறுபாடும் இல்லை என்பது விளங்கும்.