Sunday 19 February 2023

கதை - ‍‍கருத்து - செயல்

2023-02-18

கதை - ‍‍கருத்து - செயல்

'என்ன கதை விடுறே' என்று கேட்போம், ஒருவர் சொல்வதில் உள்ள நம்ப முடியாத் தன்மையைக் குறித்து!

ஆனால் நமக்கு நாமே தனி மனிதனாக, குடும்பமாக, குழுவாக, நிறுவனமாக, கட்சி, சங்கம், இயக்கமாக‌, சமுதாயமாக, தேசமாக‌, மனித உயிரினமாக... சொல்பவை எல்லாமே கதைகள் தாம்! அறிவியல் உள்பட! மதம், கலை, இலக்கியம், புராணம், இதிகாசம், பண்பாடு, மரபு, நாகரிகம், வரலாறு மட்டுமல்ல, அறிவியலும் ஒருவகைக் கதைதான்!

கதையில் நல்ல கதை என்று நாம் சொல்வதில்லையா? எந்த அடிப்படையில்? அதுபோல் தான், அறிவியல் ஒரு நல்ல கதை,  அதாவது கதையின் பல பிரிவுகள் ஒன்றொன்று ஒன்று நன்கு பொருந்தி வருகின்றன என்ற பொருளில், எப்போதும் நன்மைக்கு வழிவகுக்கும் என்ற பொருளில் அன்று.

அதே போல் கதைகளில் பல வகை உண்டு. காதல் கதை, துப்பறியும் கதை, மர்மக் கதை, திகில் கதை, அறிவியல் கதை (science fiction)....

ஒவ்வொரு கதை வகையையும் எடை போட, அளவிட‌ நாம் வெவ்வேறு வரையறைகள், அலகுகள், பரிமாணங்கள், எதிர்பார்ப்புகள் வைத்துள்ளோம். அதே போல் கலை, இலக்கியம், புராணத்தில் நாம் ஏற்றுக் கொள்வதை வரலாறு, அறிவியலில் ஒப்புக் கொள்ள மாட்டோம்.

கதைகளிலும் பொறுப்பானவை,பொருந்தி வருகின்றவை, பெரும்பாலோர் நலத்துக்கு உகந்தவை இவற்றிற்கு எதிரானவை என்பன உண்டு. ஆனால் எல்லாம் கதைகளே! கதைகள் என்ற அளவில் அவை உண்மை. உண்மை என்ற அளவில் அவை வெறும் கதைகள். அதாவது அவற்றை பொறுப்புணர்ச்சியோடு (sincere) அணுக வேண்டும்; தீவிரமாக  (serious) எடுத்துக் கொள்ளக் கூடாது. இது கதைகளை மாறும் சவால்களுக்கு ஏற்ப‌ப் புதுப்பிக்கத் தேவையான சுதந்திரத்தை நமக்கு வழங்கும்.

இந்த முகப்புரையும் கதைக‌ள் பற்றிய கதைதான்! இதை வேறுவிதமாக அளப்போம் (இரு பொருளில்)!

நாம் ஏற்கனவே பகிர்ந்து கொண்டதே: இந்தியா, இந்திய தேசியம் என்பது ஒரு கட்டுக் கதை. தமிழ்நாடு, தமிழ் தேசியம் என்பதும் கட்டுக் கதையே. பெரும்பாலும் ஒரு கதையை ஏற்றுக் கொண்டவர்கள் மறு கதையை அதே போல் ஏற்றுக் கொள்வதில்லை. ஏன் என்றால் அவர்களுக்குப் பிடித்த ஒரு கதையே முழு உண்மை என்று நம்புவதுதான்.

நோக்கம், பயன் இல்லாத கதை இல்லை. என்ன நோக்கம், யாருக்குப் பயன் என்பதைப் புரிந்து கொள்வதே முக்கியம்.

"But what (i.e., energy derived from fossil fuels) drives our machines won’t change until we change what drives our ideas." (from the below article)

இந்திய தேசியக் கதை உண்மையில் பெரும்பாலோர் நலங்களை (மதம், மொழி, மாநிலம், பண்பாடு, மரபு, சமுதாய நிலை, பொருள்நிலை...) ஒருங்கிணைக்கப் பயன்பட்டால், அதை எதிர்த்து தமிழ் தேசியம் போன்றவை இல்லாமல் அதை ஒத்து (வேற்றுமையில் ஒற்றுமை) இயங்கும். 

'உண்மையில்' என்பது முக்கியம். அப்படியாகச் சொல்லப் படலாம்; பரப்பப் படலாம். ஆனால் நடைமுறையில் ஏமாற்று வேலையாக இருக்கலாம். அது தமிழ் தேசியத்திற்கும் பொருந்தும்.

எந்தக் கதையும் தனியாக உருவாகவோ நிற்வோ இயலாது. கதைகள் மேல் பிற கதைகள் கட்டப்படும்.

இந்தப் புரிதலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த நூறு ஆண்டுகளாக நமக்கு நாமே பழந்தமிழர் வரலாற்றுச் சிறப்பு, சனாதன வர்ண ஏற்றத் தாழ்வு எதிர்ப்பு அடிப்படையில் சொல்லிக் கொண்ட தமிழ், தமிழர் மறுமலர்ச்சிக் கதை என்பது பரவலான பெரும்பாலோர் சமுதாய நிலை, பொருள் நிலை வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. அதனால் பல புதிய சிக்கல்கள், சவால்கள் எழுந்துள்ளன என்பதையும் காண்கிறோம்.

இது போன்ற நன்மை தீமை சாதக பாதகங்கள் எல்லா சமுதாயம், நாட்டிலும் நிகழ்ந்துள்ளன, நிகழ்ந்து வருகின்றன.

கதைகள் நிலையாக இருக்க முடியா. அவை புதிய சூழல், சவால்களுக்கு ஏற்பத் தொடர்ந்து புதுப்பிக்கப் பட வேண்டும்.

இத்தகைய கதைகள் தொன்மைவியல் (mythology) எனப்படுகின்றன. When we say it is a myth in day-to-day parlance we mean it is a lie, illusion, false, not-real etc. But myth has a different, deeper meaning. Myth is an image by which we make sense of ourselves and the world.

தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாய். தமிழ்க்குடி உலகின் மூத்தகுடி என்பன நம் myths.

கதைகள் (myths) என்று நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் அவற்றை விட்டு நாம் நீங்க முடியாது. இதை எழுதுகிறவர், படிப்பவர் எவரும் இக்கதைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். நாம் உருவானதே, வாழ்வதே இக்கதைகளின் வழியாகத்தான். நம்மையும் நாம் விரும்பும் வெறுக்கும் கதைகளையும் பிரிக்க முடியாது.

இத்தகைய கதைகள் வெற்று வெட்டுகள் அல்ல. அவை ஆற்றலுடையவை. அவற்றால், அவற்றிற்காக‌ நாம் எத்தகைய தியாகங்களைச் செய்யவும் எத்தகையக் கொடுமைகளைப் புரியவும் ஆளாகிறோம்; செய்கிறோம், புரிகிறோம் என்பதற்கும் செய்யவும் புரியவும் ஆளாகிறோம் என்பதற்கும் ஆழமான வேறுபாடு உள்ளது.

கதைகள் நம்மை உந்தி எழுச்சி பெற வைக்கலாம் அல்லது அழுத்தி அடிமை ஆக்கலாம்.

இன்று தமிழர்களாக, இந்தியர்களாக, ஆசியர்களாக‌, மனிதர்களாக...நம்மை நோக்கியுள்ள சவால்களுக்குக்கேற்ப நம் கதைகளை நாம் புதுப்பிக்க வேண்டும்.

"புத்தர்பிரான் சொன்னதுபோல் எல்லாமே அழியக்கூடியவை. சாசுவதமானவை அல்ல. மனிதனும், சமுதாயமும், கோட்பாடுகளும் பரம்பரை மரபுகளும், மார்க்கங்களும் மாறிக் கொண்டே இருக்கும். முந்தியது அழிந்து புதியதற்கு வழிகாட்டும். வருங்கால‌ சந்ததி என் பணிகளைத் திருத்தும், தொடரும், வளர்க்கும். இது ஜீவன யாத்திரை. இதுதான் தலை சிறந்த மதம், சமயம், சமத்துவ சித்தாந்தம். நிலை கொள்ளாத தொடர் பயணத்தால்தான் வாழ்க்கை நெறியாக்கப்பட முடியும்" ‍ ராகுல சாங்கிருத்தியாயன்

'வால்காவிலிருந்து கங்கை வரை' ‍(இந்தியில் ராகுல சாங்கிருத்தியாயன். தமிழில் டாக்டர் என்.ஸ்ரீதரன்) - பதிப்புரையிலிருந்து (கவிதா பப்ளிகேஷன், சென்னை 17 26/01/2016)

தொடர் பயணம் என்பது கதைகள் தொடர்ந்து புதுபிக்கப்படுதலால் மட்டுமே சாத்தியமாகும்.

கீழ்க்கண்ட கட்டுரை சற்று நீளமானதுதான். ஆனால் நம்மை நோக்கியுள்ள ஆபத்துகளை புறக்கணிக்காமல் மறைக்காமல் நாம் கடந்த சில பத்தாண்டுகளில் அடைந்துள்ள, அடைந்து வருகின்ற ஆரோக்கியமான மாற்றங்களை நாம் எப்படி கவனிக்கத் தவறுகிறோம்; எப்படி அவற்றை நம் கதைகளில் சேர்க்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.

Before we can reach the new future we should imagine and tell ourselves new stories! Whatever we achieved as human beings we achieved only via the stories we told ourselves.

In one sense, based on our emotional baggage, we are not any different from our prehistoric ancestors, but in another sense, based on our rule of law, basic human rights, women's liberation, education, health system, production and distribution, checks and controls, local and global government (all of them are not perfect and go up and down) we are totally different; we are modern and that journey continues; we are all part of it; the journey is created by our lives.

https://www.theguardian.com/news/2023/jan/12/rebecca-solnit-climate-crisis-popular-imagination-why-we-need-new-stories

So much is happening, both wonderful and terrible – and it matters how we tell it. We can’t erase the bad news, but to ignore the good is the route to indifference or despair

Thu 12 Jan 2023 06.00 GMT

Every crisis is in part a storytelling crisis. This is as true of climate chaos as anything else. We are hemmed in by stories that prevent us from seeing, or believing in, or acting on the possibilities for change. Some are habits of mind, some are industry propaganda. Sometimes, the situation has changed but the stories haven’t, and people follow the old versions, like outdated maps, into dead ends.

We need to leave the age of fossil fuel behind, swiftly and decisively. But what drives our machines won’t change until we change what drives our ideas. The visionary organiser adrienne maree brown wrote not long ago that there is an element of science fiction in climate action: “We are shaping the future we long for and have not yet experienced. I believe that we are in an imagination battle.”

In order to do what the climate crisis demands of us, we have to find stories of a livable future, stories of popular power, stories that motivate people to do what it takes to make the world we need. Perhaps we also need to become better critics and listeners, more careful about what we take in and who’s telling it, and what we believe and repeat, because stories can give power – or they can take it away.

To change our relationship to the physical world – to end an era of profligate consumption by the few that has consequences for the many – means changing how we think about pretty much everything: wealth, power, joy, time, space, nature, value, what constitutes a good life, what matters, how change itself happens. As the climate journalist Mary Heglar writes, we are not short on innovation. “We’ve got loads of ideas for solar panels and microgrids. While we have all of these pieces, we don’t have a picture of how they come together to build a new world. For too long, the climate fight has been limited to scientists and policy experts. While we need their skills, we also need so much more. When I survey the field, it’s clear that what we desperately need is more artists.”

....

...

(read the full article using above link)

Saturday 11 February 2023

குன்றாச் செல்வம் - பலமான ஆயுதம் - ஆழ்ந்த பதில் - சிந்திக்காச் சுதந்திரம்

2023-02-02

குன்றாச் செல்வம் - பலமான ஆயுதம் - ஆழ்ந்த பதில் - சிந்திக்காச் சுதந்திரம்


நண்பர் செல்வநாதன் பிப்ரவரி 2, 2023 அன்று அனுப்பியது:

எளிமை ஒரு வகைச் செல்வம்
பொறுமை ஒரு வகை ஆயுதம்

இன்று (பிப்ரவரி 11, 2023) அதிகாலை அது செம்மையுற்றது:

எளிமை ஒரு வகையில் குன்றாச் செல்வம் (குறையா)

பொறுமை ஒரு வகையில் பலமான ஆயுதம் (வலிவான)

மெளனம் ஒரு வகையில் ஆழ்ந்த பதில் (பொதிந்த / செறிந்த / பொறுப்பான)

ஆன்ம விழிப்பு (மெய்யுணர்வு) ஒரு வகையில் உறங்கா உறக்கம் (தூங்காத் தூக்கம் / போரிடா விடுதலை / சிந்திக்காச் சுதந்திரம்)

இவை அனைத்தும் அவற்றிற்கு எதிரானவை இல்லாமல் இயலா.

எளிமை x பகட்டு / செழிப்பு
பொறுமை x சீற்றம்
மெளனம் x வாதம் / வழக்குரை 
ஆன்மீக விழிப்பு (மெய்யுணர்வு) x லௌகீக லயிப்பு