Sunday 27 March 2011

காலையில் பிறந்து ....(சரியார் கும்மி)

2010-12-11


காலையில் பிறந்து
            பகலில் பழகி
      மாலையில் பிரிந்து
            இரவில் இறப்போம்.
வேலையில் வெந்து
            வாழ்வில் நொந்து
      வாலைத் தேடி
            வட்டம் அடிப்போம்.
சாலையில் மேய்ந்து
            சந்திப்பில் குழம்பி
      பாலையில் தொலைந்து
            பயணம் முடிப்போம்
மூலையில் கிடந்து
            மோனத்தில் மூழ்கி
      கனவில் கலைந்து
            காலையில் பிறப்போம்.
                    சரியார்

No comments:

Post a Comment