Tuesday 17 August 2021

அறிவாலுக்கு அளவில்லை

 அறிவாலுக்கு அளவில்லை


09-July-2021


 

தேவா:

 

Aware that things happen as they happen because the world is as it is.

 

The known is accidental, The unknown is the Home of Real.

 

To live in the known is bondage, To live in the unknown is Liberation.

 

தொல்:

 

புத்தர் ஆசைதான் துன்பங்களுக்குத் தோற்றுவாய் என்றார். ஆனால் அறிவு (அறிதல் - to know) தான் எல்லாத் துன்பங்களுக்கும் மூலம். ஆசையைத் துறக்க முடியாவிட்டாலும் வலிவிழக்கச் செய்யலாம். அறிவை அதுபோல் கூடச் (அதன் பிடியைத் தளர்த்துவது) செய்வது மிக மிகக்  கடினம்.

 

கூர்த்த அறிவு அத்தனையும் கொள்ளை கொடுத்து உன் அருளைப்

பார்த்தவன் நான் என்னை முகம் பாராய் பராபரமே

            - தாயுமானவர் : பராபரக்கண்ணி

 

அறிவைக் கொள்ளைக் கொடுக்காமல் இருப்பின் உண்மை (கருத்துத் திரை இல்லாமல்) இயல்பை 'அறிய' முடியாது. இந்த 'அறிய' என்பது அதுவாகவே இருத்தல் என்ற பொருள் படும்.

 

எடுத்துக்காட்டாக, எந்த மொழி ஒலி, வரி வடிவத்தையும் அறியும் (தெரிந்து கொள்ளும்) முன் நாம் அதை எப்படிக் கேட்டிருப்போம், பார்த்திருப்போம் என்பதை நம்மால் மீண்டும் கொண்டு வர முடியாது. இது மற்ற எல்லா அறிதலுக்கும் பொருந்தும்.

 

ஒரு மரத்தை 'மரம்' என்ற கருத்து இல்லாமல் நம்மால் (அச்சொல்லை, கருத்தை அறியும் முன்பு பார்த்தது போல்) இனிமேல் (தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும்) பார்க்க முடியாது.

 

அறிவைப் பெறுவது என்பது உயர்வு அன்று; வீழ்வு. அதனால் தான் பைபிள் கதையில் அறிவுக் கனியை (கடவுள் உண்ணக் கூடாது என்று தடுத்ததை, பாம்பு ஆசையைத் தூண்டி) உண்டவுடன், ஆதாம் ஏவாள் தாங்கள் நிர்வாண‌த்தை உணர்கின்றனர்; மரண பயம் கவ்விக் கொள்கிறது; ஆனால் அறிவு வளர்கிறது.

 

அறிவால் வந்த வீழ்ச்சியை உணரவும் அறிவே உதவுகிறது என்பது அதன் முரண்பாடு.

 

'அறிவு' தான் நம்முடைய வால்; மனிதக் குரங்கிற்கு வெளி வால்; மானிடக் குரங்கிற்கு உள் வால்; வெளி வாலுக்கு அளவு உண்டு; உள் வாலுக்கு எல்லை இல்லை.

 

அறிவால் நமக்கு வந்த மற்றொரு வீழ்ச்சி என்னவென்றால் முட்டாள்தனம்; பேதைமை. அறிவு இல்லாவிடில் பேதைமையும் இருக்க முடியாது.

 

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்

கோவிந்தம் பஜ மூடமதே (ஆதிசங்கரர்)

 

அறிவு வளர வளர முட்டாள்தனமும் வளரும்.

 

அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு (திருக்குறள்: 1110)

 

அறிவைக் காமத்திற்கு ஒப்பிட்டு அதை அனுபவிக்க அனுபவிக்க (அறிவார்வம், காமம்) அறியாமை (அடங்காமை) வெளிப்படும் என்று கூறியுள்ளார்.

 

தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே - ஒரு

தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே (வள்ளலார்).

 

தன்னை அறிவது என்பது இருப்பின் (தன்னின்) உண்மை இயல்பை உணர்ந்து அதுவாகவே இருப்பது.

 

கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து (திருக்குறள்: 130)

 

கற்று (அறிந்து; அறிவு வளர்ச்சி பெற்று) பின் அடங்க வேண்டும்.

 

எதைச் செய்யலாம்; எதைச் செய்யக் கூடாது என்ற அடங்குதல் இல்லை என்றால் 'அறம்' (ஒழுங்க‌மைதி) அங்கு இருக்காது.

 

"The highest possible stage in moral culture is when we recognize that we ought to control our thoughts". - Charles Darwin

 

நம்முடைய சிந்தனைகளை நாம் கட்டுப்படுத்தியாக வேண்டும் என்று புரிந்து கொள்ளும் நிலை தான் நம் பண்பின் உச்சக் கட்ட வளர்ச்சிப் படியாகும்.

 

பெரியாரின் தொண்டு எல்லாம் நம் சிந்தனை விடுதலைக்குத்தான்.

 

'விடுதலை' என்றால் மனம் போன போக்கில் இருப்பது என்ற பொருளும் உண்டு. மனத்தை, அறிவை ஆளுமை செய்து அதற்கு (கருத்துகளுக்கு) அடிமையாக இல்லாமல் இருப்பது என்ற பொருளும் உண்டு.

 

பெரியார் தொண்டன் (பகுத்தறிவு) ரமணர் அடியான் (மெய்யறிவு) ஆகி விட்டதாகத் தோன்றும். உண்மைக்கு வழி கிடையாது (Truth is a pathless land - JK). அல்லது எவ்வழியும் உண்மைக்கு வழியாகலாம். பெரியார் வழி வராவிடில் ரமணரைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம். 'அறிவுக்கு விடுதலை தா' என்ற பெரியார் வழி ரமணரின் 'அறிவுக்கு உன்னிடமிருந்து விடுதலை கொடு அல்லது நீ அறிவு மாயையிலிருந்து (பொருளல்லவற்றை பொருளாக உணரும் மருள்) விடுதலை பெறு' என்று விளங்கியது.

 

விடுதலை என்பது தலை / தளை (துன்பம், அடிமைத் தனம், இக்கட்டு, விலங்கு) விடுபடுதல்.

 

கற்றும் அடங்காரில் கல்லாதாரே உய்ந்தார்

பற்று மதப்பேயின் பால் உய்ந்தார் - சுற்றுபல‌

சிந்தைவாய் நோய் உய்ந்தார் சீர்தேடி ஓடல் உய்ந்தார்

உய்ந்தது ஒன்று அன்று என்று உணர்.

            - ரமணர் : உள்ளது நாற்பது

 

[நூல்கள் கற்றும் (ஆன்ம விசாரணையினால்) அகந்தை அடங்கப் பெறாதவர்களை விடக் கல்லாதாரே பிழைத்தவர்கள், பிடித்துக் கொள்ளும் மதமென்னும் பேயினின்றும் தப்பினார்கள். சுழல்கிற பல சிந்தை, வாக்கு இவ்விரண்டின் நோயினின்றும் தப்பினார்கள். சீரைத் (செல்வத்தை) தேடி நாடு எங்கும் அலைதலைனின்றும் தப்பினார்கள். இப்படியாகக் கல்லாதவர்கள் தப்பின கேடுகள் ஒன்று அல்ல, எத்தனையோ என்று உணர்.]

 

'ஆட்டுக்கு வாலை அளந்து வைச்சவன் - ஆளுக்கு 

அறிவாலை அளந்து வைக்கல' (சரியாரின் இன்றைய உளறல்)


Shan:

 

என் வீட்டுக்கு வெளியே சமயங்களில் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும். சமயங்களில் நான் நினைப்பதுண்டு நிம்மதியான வாழ்க்கை, எதிர்காலத்தைப் பற்றிய பயம் இல்லாத,  எதிர்காலம் என்ன என்று தெரியாத,  மரணம் பற்றிய அறிவு இல்லாத,  கவலையில்லாத வாழ்க்கை. ஆனால் ஒரு மாடு போல வாழ நீ தயாரா என்றால் யாரும் சரி என்று சொல்ல மாட்டார்கள்.

 

Thol:

 

உண்மைதான். மாடு போல் வாழச் சரி என்று சொன்னாலும் இல்லை என்று சொன்னாலும் அப்படி வாழ்வதும் வாழாமல் இருப்பதும் நம் கையில் இல்லை. அறிவுதான் தடை என்று அறிவால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அத்தடையை நீக்கிக் கொள்ள அறிவால் முடியாது.

 

இஃது ஒரு பக்கம் இருக்க, மாடுகள் உண்மையில் அப்படி ஓர் உன்னதமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கவில்லை என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன‌. அவற்றின் வாழ்விலும் போட்டிகளும் தலைமைச் சண்டைகளும் உள்ளன.

 

ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொரு பறவையும் தவளையும் வெட்டுக்கிளியும் ஒவ்வொரு மனிதர்களைப் போல் தனித்த இயல்புகளைக் கொண்டுள்ளன என்பதையும் அறிவியல் ஆய்வுகளின் மூலம் அறிகிறோம். அவற்றிலும் பயந்த சுபாவம், புதியவற்றை ஆராயும் துணிவு, புதிய வழிகளில் உணவைத் தேடும் ஆர்வம்/முனைப்பு என்று பலவிதமாக ஒவ்வொரு தனிஉயிரியும் (individual animal / insect...) உள்ளன.

 

I have watched many documentaries regarding this - The Secret Life of Chickens, Farm Animals, Pet Cats, Pet Dogs... all presented with a scientific approach.

 

We idealise their lives. They have their own problems / tensions / suffering (elephants mourn their dead relatives). Pet dogs cry when left alone (locked) in their house when the owner goes to work. They get all sorts of diseases.

 

As per cows, to increase the milk yield we feed them rich food, which results in their udders growing very big and rubbing against their legs; they are not able to walk properly and get arthritis. I saw a documentary on the BBC in which they said this problem is still unresolved due to our greed for productivity.

 

தன்னுடை கொட்டடியில் புதிதாக வரும் கோழி, குதிரை, குரங்கு... எல்லாம் குழுவில் உடனடியாக ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. அவை துன்புறுத்தலுக்குள்ளாகின்றன. உணவுக்கு வரிசையில் (pecking order) காத்திருக்க வேண்டும்.

 

டால்பின்கள் பிற இளம் டால்பின்களை ராகிங் (ragging) செய்கின்றன.

 

ஒன்று வேண்டுமானால் சொல்லலாம். மனிதனைத் தவிர பிற விலங்குகள் துன்பத்தை நினைத்து நினைத்து வருந்துவதாகவும் இன்பத்தை நினைத்து நினைத்து ஏங்குவதாகவும் தெரியவில்லை. அது மனிதர்களுக்கே உள்ள சாபமும் வரமும் ஆகும்.

 

பெரியார் இன்றும் என்றும் (விடியல் பதிப்பகம், கோவை, ஏழம் பதிப்பு, பிப்ரவரி 2019) பக்கம் 25

 

 

 

 


No comments:

Post a Comment