Saturday 24 November 2012

கற்றலும் படித்தலும்

2012-11-24

http://siragu.com/?p=4995#comment-1650

சொற்பொருள் தெளிவோம்: கற்றலும் படித்தலும்

பெரியண்ணன் சந்திரசேகரன் - அற்றுலான்றா, அமெரிக்கா 

கல், படி இரண்டையும் ஆழமாகப் புரிந்து கொள்ளச் செய்யும் நல்ல கட்டுரை. ‘அடியாத மாடு படியாது’ என்பதில் உள்ள ‘படி’ என்பதையும் ஒப்பிட்டு நோக்கலாம். தொடர்ந்து மீண்டும் மீண்டும் செய்வதால் நம்மிடம் படியும் பண்புகள் என்ற பயன்பாட்டையும் காண்க. படி = பணி (படிந்து செல். அதாவது பணிந்து செல்) என்ற பொருளும் உள்ளது. பெரியண்ணன் சந்திரசேகரன் இது போன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து எழுத வேண்டும். மொழி ஓர் இன்பம் என்பதை நாம் அடுத்த தலைமுறையினருக்கும் நுகரப் பழக்க வேண்டும்.

சில‌ எடுத்துக் காட்டுகள்:

மண் என்றால் மண்டிக் கிடப்பது. ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கிடப்பது. எனவே களி மண் எனப்பட்டது. ஆனால் ஆற்று (அல்லது கடல்) மணல் என்ப்பட்டது. மண் + அல் = மணல். ‘மண்ணில் கயிறு திரிக்கிறான்’ என்று சொல்லாமல் ‘மணலில் கயிறு திரிக்கிறான்’ என்று சொல்லக் காரணம் மணல் ஒன்றோடு ஒன்று ஒட்டாத துகள்களைக் கொண்டது. எனவே மணலில் கயிறு திரிப்பது முடித்தால் பெரும் சாதனை, முடியாததற்குப் புரட்டு.

விலங்குகளின் குட்டிப் பெயர்களைப் போல் மரங்களின் தொகுதிக்கும் பலவிதமான பெயர்கள் உள்ளன. மாஞ்சோலை. ஆனால் தென்னந் தோப்பு. கரும்புத் தோட்டம். மூங்கில் புதர் / காடு.

குளமும் ஏரியும் அளவில் மட்டும் வேறு படவில்லை. குளிக்கப் பயன்பட்டது குளம். ஏர் உழவுக்குப் பயன்பட்டது ஏரி.

No comments:

Post a Comment